விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7.18 லட்சம் மோசடி… வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி தேனியை சேர்ந்த பெண்ணிடம் 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வட மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி சைபர் கிரைம் காவல்துறையிடம் கடந்த ஆண்டு போடி அருகே உள்ள கீழசொக்கநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, டெல்லிக்கு விரைந்த தனிப்படை போலீசார், ரவி கிருஷ்ணன், கார்த்திக், ராஜா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து அழைத்து வந்தனர்.

முக்கிய குற்றவாளியான திருச்செங்கோட்டை சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.