Vignesh Shivan:ஏ.கே. 62ல் இருந்து நீக்கப்பட்டும் விக்னேஷ் சிவன் செய்த காரியம்: அஜித் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்

Ajith Kumar: இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்த விஷயத்தை பார்த்த அஜித் ரசிர்களால் பீல் பண்ணாமல் இருக்க முடியவில்லை.

ஏ.கே. 62துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும். ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. அந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றார்கள். இந்நிலையில் விக்னேஷ் சிவனை கதையை திருத்துமாறு அஜித் கூறினாராம். அவர் கதையை திருத்தியும் பிடிக்காததால் ஏ.கே. 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டதாக தகவல் வெளியானது.

அஜித்நயன்தாராவுக்கு மட்டும் அல்ல விக்னேஷ் சிவனுக்கும் அஜித் குமார் மீது தனி ப்ரியம் உண்டு. படத்தில் இருந்து தன்னை நீக்கியபோதிலும் அஜித் மீதான பாசம் மட்டும் விக்னேஷ் சிவனுக்கு மாறவில்லை. அஜித் வெள்ளை சட்டையில் க்யூட்டாக சிரிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டு ஹார்டின்களை தட்டிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன்விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அஜித் மீது இம்புட்டு பாசமா உங்களுக்கு அன்பான இயக்குநரே. ஏ.கே. 62 படத்திற்கு நீங்கள் வேண்டாம் என்று சொல்லியும் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட்டு பாசத்தை காட்ட தனி மனசு வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்கள். விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரீஸை பார்த்த அஜித் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.

வெளிநாடுஏ.கே. 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார் அஜித் குமார். ஸ்காட்லாந்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்கள். இந்நிலையில் ஏ.கே. 62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

​Ajith, AK62:தல கெளம்பிடிச்சுடோய், தாறுமாறா வைரலான அஜித்: என்னாச்சுனு தெரியுமா?

நயன்தாராஏ.கே. 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே நயன்தாரா என்று கூறப்பட்டது. இந்நிலையில் விக்னேஷ் சிவனை நீக்கியதும் அஜித் குமாருக்கு போன் செய்து பேசினாராம் நயன்தாரா. ஆனால் எதுவும் மாறவில்லை. இதையடுத்து அஜித் மீது கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா என தகவல் வெளியானது.
வதந்தி?இனி என்ன ஆனாலும் சரி அஜித்துடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என நயன்தாரா முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் செய்திருக்கும் காரியத்தை பார்த்தால், நயன்தாராவுக்கு அஜித் மீது கோபம் இருப்பதாக தெரியவில்லை. ஆக கோபம் தொடர்பான தகவலும் வதந்தி தான் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

​கஷ்டமான முடிவு எடுத்த நயன்தாரா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.