கல்லூரி மாணவிகள் முன் பைக் ஸ்டண்ட் செய்து கெத்து காட்டிய இளைஞர் கைது..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி மாணவிகள் முன் ஸ்டண்ட் செய்து கெத்து காட்டிய இளைஞரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து மாணவி ஒருவரின் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

கடந்த 9-ஆம் தேதி கல்லம்பலத்தில் சாலையோரம் நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் முன் nowfal என்ற இளைஞர் ஸ்டண்ட் செய்த போது, பைக் நிலைதடுமாறி மாணவி மீது மோதியதில், காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு இளைஞரை கைது செய்த கேரள போக்குவரத்து துறையினர் nowfal-ன் ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.