கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்றவர்கள் மீது மர்மகும்பல் நடத்திய கொலை வெறி தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!

கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்றவர்கள் மீது மர்மகும்பல் நடத்திய கொலை வெறி தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோகுல் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் வாய்தாவிற்கு ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு காலையில் வந்தனர்.

நீதிமன்றம் அருகே இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக அவர்களை கத்தியால் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

பலத்த வெட்டுக்காயங்களுடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற மனோஜ் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொலை செய்துவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.