ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ரூ.1000-5000 வரை விநியோகம் – அண்ணாமலை

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இடைத்தேர்தலில் வெற்றி பெற பணத்தின் மீது திமுக கூட்டணி  நம்பிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த வார இறுதியில் திமுகவினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2 கிலோ இறைச்சியை லஞ்சமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, பிரச்சாரத்திற்கு செல்லும் திமுகவினர் 1000 ரூபாய் முதல் 5000 வரை பணம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.