சிக்கிம், அசாமில் நிலநடுக்கம்

கவுகாத்தி: அசாமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மத்திய அசாமில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். காலை 11.57மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.2ஆக பதிவானது. நாகோன் மாவட்டத்தில் உள்ள ஹோஜாய் பகுதியை மையமாக கொண்டு 10கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது.

இதேபோல் சிக்கிமிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகேளரில் 4.15ஆக பதிவாகி உள்ளது. மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் யுக்சோமில் இருந்து வடக்கு மேற்கே 70கி.மீ. தொலைவில் 10கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.