திருப்பதி லட்டு சாப்பிட ஆசையா? வீட்டிலே கூட செய்யலாம்..எப்படினு தெரியுமா?


பொதுவாக  திருப்பதி என்றாலே பெருமாள், அதற்கு அடுத்து லட்டு. இவை தான் முதலில் நினைவுக்கு வரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதமாக இது இருக்கிறது .

இது திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும்.

வேறு எங்கும் இந்த லட்டு கிடைக்காது. கடைகளில் விற்கவும் அனுமதி கிடையாது.

ஆனால் இதனை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டு எளியமுறையில் செய்யலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.    

திருப்பதி லட்டு சாப்பிட ஆசையா? வீட்டிலே கூட செய்யலாம்..எப்படினு தெரியுமா? | Do You Want To Eat Tirupati Laddu

தேவையான பொருட்கள்

  • கடலைமாவு – 250 கிராம்
  • சர்க்கரை – 500 கிராம்
  • பால் – 100 மிலி

  • முந்திரி – 25 கிராம்

  • உலர் திராட்சை – 25 கிராம்
  • கிராம்பு – 10

  • ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்

  • ஜாதிக்காய் பொடி – சிறிதளவு
  • பச்சை கற்பூரம் – சிறிதளவு
  • கற்கண்டு – 25 கிராம்

  • எண்ணெய் – தேவையான அளவு
  • நெய் – 2-3 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை சேர்த்து 250 மிலி தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
  • வழக்கமான சர்க்கரை பாகு போல் கெட்டியாக இல்லாமல் தண்ணீரில் சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • அடுத்து, கடலை மாவுடன் பால் மற்றும் 250 மிலி தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து தயார் செய்து கொள்ள வேண்டும்
  • இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்பு, கடாயின் மேல் சல்லடை வைத்துக் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்தி போட்டுக் கொள்ளவும். 
  • நன்கு பொன்னிறமாக பூந்தியைப் பொரித்து, உடையாமல் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு இந்த பூந்தியைக் சர்க்கரை பாகில் உடனே சேர்க்கவும்.

    இப்போது கடாயில் இருக்கும் எண்ணெயில் முந்திரி, கிராம்பு, திராட்சை ஆகியவற்றை போட்டு, பொரித்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.  

  • அடுத்து, ஏலக்காய் பொடி, கற்கண்டு, ஜாதிக்காய் பொடி, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் ஆகியவற்றை சர்க்கரை பாகில் இருக்கும் பூந்தியுடன் சேர்த்து 45 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.
  • இப்போது பூந்தி, சர்க்கரை பாகில் நன்கு ஊறி, மேலே பொங்கி வந்து இருக்கும்.
  • இதனுடன் உருக்கிய நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உருண்டை பிடிக்க வேண்டும். 
  • இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் பூந்தியைப் பக்குவமாய் எடுத்து உருண்டைகளாகப் பிடித்தால் லட்டு தயார். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.