சென்னையில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் அருகே அம்பேத்கர் சாலையை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ என்பவர் கேகே நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் எம்பிபிஎஸ் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டின் 10 ஆவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவியிடம் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த மாதம் ஐரோப்பாவுக்கு செல்ல பெற்றோர் திட்டமிட்டுள்ள நிலையில், மகிழ்ச்சியாக சென்று வாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.