திருச்செந்தூரில் கடல் 25 அடிக்கு உள்வாங்கியதால் பரபரப்பு.!

திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அருகே கடற்கரையில் 25 அடி தூரம் உள்வாங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கடற்கரையில் அம்மாவாசை பௌர்ணமி அஷ்டமி மற்றும் நவமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவதும் மாலையில் பழைய நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நவமி திதி தனமான நேற்று காலை சுப்பிரமணி சாமி திருக்கோவிலுக்கு அருகே கடல் நீர் சுமார் 25 அடி உள்வாங்கியது. இதனால் கடற்கரை ஓரத்தில் இருந்த பாசி படிந்து பாறைகள் வெளியே காணப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் பயமின்றி வழக்கம் போல் கடலில் குளித்தனர். மேலும் சிலர் பாறைகளுக்கு இடையில் இருக்கும் சங்கு சிப்பி போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.