திருமணமான 3-வது நாளே புதுமண தம்பதி சாலை விபத்தில் உயிரிழப்பு

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரம் பகுதியை சேர்ந்த வேணுவுக்கும் (26), ஒடிசா மாநிலம், பரம்பூர் கிராமத்தை சேர்ந்த பிரவல்லிகா (23) என்கிற பெண்ணுக்கும் கடந்த 10-ம் தேதி, விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருமணம் நடந்தது.

இதனை தொடர்ந்து, 13-ம் தேதி, பைக்கில் புதுமண தம்பதியினர் இருவரும் மணமகளின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில், கொல்லாந்திரா எனும் இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த டிராக்டர் இவர்களின் பைக் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே மணமகன் வேணு பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் பிரவல்லிகா படுகாயமடைந்தார். அவரை போலீஸார் பரம்புரம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி பிரவல்லிகாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமாகி வெறும் 3 நாட்களில் புது மண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.