திருமணமான 3-வது வாரத்தில் தாலியை கழற்றிவிட்டு மாயமான பெண்.. வலைவீசி தேடிவரும் போலீசார்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருமணமான மூன்றாவது வாரத்தில் தாலியை கழற்றிவைத்துவிட்டு புதுமணப் பெண் மாயமாகியுள்ளார்.

துறையூர் அருகேயுள்ள வைரிசெட்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திக் – கிருஷ்ணவேனி ஆகியோருக்கு கடந்த மாதம் 26ம் தேதி திருமணம் நடந்தது.

கடந்த 13ம் தேதி தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது, அனைவரும் உறங்கிய நேரத்தில் தாலியை கழற்றிவைத்துவிட்டு கிருஷ்ணவேனி மாயமானார். கணவன் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் அந்தப்பெண்ணை தேடி வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.