துருக்கி, சிரியாவில் “நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது” – WHO எச்சரிக்கை..!

பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் குளூஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது, தண்ணீர் மற்றும் சுகாதார அமைப்பில் கடும் சேதத்தை நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் தொற்று நோய்கள், நீர்வழி நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 100 ஆண்டுகளில் ஐரோப்பா சந்தித்துள்ள மாபெரும் இயற்கைப் பேரழிவு இந்த நிலநடுக்கம் என்று ஹான்ஸ் குளூஜ் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.