வீட்டு வாசலில் பட்டாசுவெடிப்பு- தட்டிக் கேட்ட தாய் – மகன் மீது தாக்குதல்

நாகை மாவட்டம் தொழுதூர் அருகே வீட்டு வாசலில் பட்டாசு வைத்ததை தட்டி கேட்ட தாய், மகனை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொழுதூரைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் மகன் விஜயகுமாரோடு தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அங்கு நடந்த இறப்பு சம்பவத்தின் போது பட்டாசு வெடித்ததில் ஒரு பட்டாசு தனலெட்சுமி வீட்டு திண்ணையில் விழுந்து வெடித்துள்ளது.

இதனை தனலட்சுமி மற்றும் அவரது மகன் ஆகியோர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த 3பேர் அவர்களைத் தகாத வார்த்தையில் கண்டித்து தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காயம் அடைந்த இருவரையும் ஏற்றிச் செல்ல வந்த ஆம்புலன்சையும் சிறைபிடித்து ஊழியர்களிடமும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.