இந்திய விமான நிறுவனங்கள், சுமார் 1,100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க ஒப்பந்தம்

நாட்டின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள், சுமார் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால், விமானத்துறை விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது.

ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர், ஏர் இந்தியா நிறுவனம், 470 விமானங்களை வாங்க ஏர் பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதேபோல் இண்டிகோ நிறுவனம், சுமார் 500 விமானங்களை வாங்கவுள்ள நிலையில், ஆகாசா, கோ பர்ஸ்ட், விஸ்டாரா உட்பட ஒட்டுமொத்த நிறுவனங்களும் சுமார் 1,115 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவிற்கு 2,210 புதிய விமானங்கள் தேவைப்படுமென போயிங் நிறுவனம் கணித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.