ஒரே பாதையில் வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 8 பெட்டிகள் தடம் புரண்டது

சுல்தான்பூர்: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் சந்திப்பு அருகே ஒரே பாதையில் வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் லக்னோ-வாரணாசி வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் சந்திப்பின் தெற்கு கேபிள் அருகே இன்று அதிகாலையில் 2 சரக்கு ரயில்கள் எதிர்பாராத விதமாக ஒரே பாதையில் வந்தது. இதனால் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் 2 இன்ஜின்களும் சேதமடைந்தன. 8 பெட்டிகள் தடம் புரண்டது.

இதனால் லக்னோ-வாரணாசி மற்றும் அயோத்தி-பிரயாக்ராஜ் ரயில் பாதைகளில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தகவலறிந்து ரயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சேதமடைந்த இன்ஜின்களை பழுதுபார்த்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சேதமடைந்த பெட்டிகளை அகற்றி ரயில் சேவை தொடர விரைந்து நடவடிக்கை எடுத்தனர். சிக்னல் பிரச்னை காரணமாக இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.