மீன் வியாபாரி ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைது..!

சென்னை வண்டலூர் அருகே மீன் வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டேரியில் மீன் வியாபாரம் செய்து வந்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரையும் காரில் வந்த மர்ம கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதில், சம்பவ இடத்திலே பார்த்திபன் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஜனகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக 3 தனிப்படை அமைத்து விசாரித்துவந்த போலீசார், படப்பை அருகே பதுங்கியிருந்த மாணிக்கவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த், அஜய் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.