கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்துடன் கூடிய ATM இயந்திரம் ஒன்றை களவாடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து ATM இயந்திரம் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் வீட்டில் இருந்து அந்த கைத்துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.