உத்தவ் தாக்கரேவுக்கு இடி..! கட்சி பெயரையும், சின்னத்தையும் கைப்பற்றினார் ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் சின்னமான வில்-அம்பு சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். மராட்டியத்தில் கடந்த ஜூன் 2022 இல் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிளவால் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.

அதனையொட்டி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏகாந்த் ஷிண்டே வெற்றி பெற்று முதல்வராக ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸும் பதவியேற்றனர். இருப்பினும் ஒரே கட்சியில் இரு பிரிவுகளாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமைக்கோரி இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முடக்கி இரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வழங்கியது.

அதானி மற்றும் பிபிசி விவகாரம்; பீகார் முதல்வரின் நச் கருத்து.!

அதனை தொடர்ந்து கட்சி பெயர் மற்றும் சின்னத்தின் உரிமை இரு பிரிவுகளில் யாருக்கு உள்ளது குறித்த இறுதி விசாரணை ஜனவரி மாதம் நடந்தது.

அப்போது, உத்தவ் தாக்கரே தரப்பில், சிவசேனாவின் விதிகளை மேற்கோள் காட்டி, ஒரு உறுப்பினரை நியமனம், இடைநீக்கம் மற்றும் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரங்களைக் கொண்ட மிக உயர்ந்த பதவி கட்சித் தலைவர் என்று வாதிட்டது. மறுபுறம், கட்சியின் பல தலைவர்கள், துணைத் தலைவர்கள், தகவல் தொடர்புத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மேயர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இதுதொடர்பான இறுதி முடிவை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. அதன்படி, சிவசேனா பெயரையும் கட்சியின் சின்னமான வில் – அம்பையும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.