சைவ உணவகத்தில் அசைவ உணவு கேட்டதால் தகராறு.. ஆயுதப்படை காவலர்களும் – ஓட்டல் ஊழியர்களும் ஒருவரையொருவர் தாக்குதல்..!

தாம்பரம் அருகே சைவ உணவகத்துக்கு சென்று அசைவ உணவகம் கேட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஆயுதப்படை காவலர்களான ரவி, தமிழ்செல்வம் ஆகியோர் மஃப்டியில் நேற்றிரவு, பதுவஞ்சேரியில் உள்ள உணவகத்துக்கு சென்று சிக்கன் ஃபிரைட் ரைஸ் கேட்டுள்ளனர்.

இது சைவ உணவகம், இங்கு அசைவம் கிடையாது என ஓட்டல் ஊழியர்கள் கூறிய நிலையில், இவ்வளவு பெரிய ஓட்டலில் அசைவம் இல்லையா? என ஆயுதப்படை காவலர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

ஓட்டல் உரிமையாளர் போலீசில் புகாரளிக்க சென்றபோது, ஓட்டல் ஊழியர்கள் முதலில் தாக்கியது சிசிடிவி மூலம் தெரியவந்ததால் அவர் புகாரளிக்கவில்லை என கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.