Vaathi: அப்போ தனுஷ்.. இப்போ நீங்களா.?: சர்ச்சையை கிளப்பும் 'வாத்தி' இயக்குனரின் பேச்சு.!

தனுஷின் ‘வாத்தி’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இட ஒதுக்கீடு குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

வாத்திதனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வாத்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் ரிலீசாகியுள்ள இந்தப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் ‘வாத்தி’ பட இயக்குனர் வெங்கி அட்லூரியின் பேச்சு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

100 கோடியை குவித்த திருச்சிற்றம்பலம்கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் நடித்த இந்தப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது.

ஏமாற்றிய நானே வருவேன்இதனையடுத்து தனுஷ், செல்வராகவன், யுவன் கூட்டணியில் ‘நானே வருவேன்’ படம் வெளியானது. தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

வரவேற்பை பெறும் வாத்திஇதனிடையில் தமிழ், தெலுங்கு மொழியில் உருவான ‘வாத்தி’ படத்தில் நடித்தார் தனுஷ். வெங்கி அட்லுரி இயக்கிய இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்தார். இந்தப்படத்தினை சித்தாரா எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள ‘வாத்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

வெங்கி அட்லூரிஇந்நிலையில் ‘வாத்தி’ படத்தின் ப்ரோமோஷனின் போது பேட்டி ஒன்றில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியுள்ளது தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அதில், ‘நீங்கள் ஒன்றிய கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என பேட்டி எடுத்தவர் கேட்டபோது அதற்குப் பதிலளித்த வெங்கி அட்லூரி, “நான் சொல்வது சர்ச்சையை ஏற்படுத்தலாம். இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். இட ஒதுக்கீடு முறையை பொருளாதார ரீதியில் கொடுப்பேன். சாதி ரீதியில் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

கிளம்பும் சர்ச்சைஅவரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ‘வாத்தி’ படத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ள வெங்கி அட்லூரி, இட ஒதுக்கீடு குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது பலவித விமர்சனங்களை கிளப்பி வருகிறது. ஏற்கனவே ‘வாத்தி’ இசை வெளியீட்டின் போது தனுஷ் பேசியது சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.