அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு;‘என்னால முடியல’-அதிபர் பைடன் கதறல்.!

துப்பாக்கி வன்முறை என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது.

அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் சமீபத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கொடி பாதியில் பறக்கவிடப்பட்டு அமெரிக்காவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு இந்திய குடும்பத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இப்படியாக அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து மிக மோசமான சூழலை உருவாக்கி வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. தெற்கு அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிசிசிப்பியில் உள்ள அர்கபுட்லா என்ற சிறிய நகரத்தில் உள்ள ஒரு கடையில் ஒரு நபரை சுட்டுக் கொன்ற நபர், பின்னர் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று ஒரு பெண்ணைக் கொன்றார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட அந்த பெண் துப்பாக்கி சூடு நடத்தியவரின் முன்னாள் மனைவி என்று கவுண்டி ஷெரிப் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அண்டை வீட்டில் நுழைந்த நபர் ஆண் மற்றும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். அவரது பெயர் ரிச்சர்ட் டாலே எனவும் வயது 53 என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவரிடம் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன கருணா..உடல்நிலை எப்படி இருக்கு? நலம் விசாரித்த முதல்வர்!

இதுகுறித்து மிசிசிப்பி மாகாண கவர்னர் டேட் ரீவ்ஸ் கூறும்போது, “ துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனியாளாகத்தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கிறார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள்” என்று தெரிவித்தார்.

இந்தியா நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்தலாமா.? – அமெரிக்கா பதில்.!

துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “இந்த வருடத்தில் 48 நாட்கள் தான் கழிந்துள்ளது. ஆனால் இதுவரை 73 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துவிட்டன. போதும்..இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதால் இது குறைந்து விடாது. துப்பாக்கி வன்முறை ஒரு தொற்றுநோய். நாடாளுமன்றம் இப்போது இதற்கு எதிராக செயல்பட்டே ஆக வேண்டும். துப்பாக்கி பயன்பாடு குறித்து சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர காலமிது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.