‘நாட்டு மக்கள் நலனுக்காக வேண்டினேன்” – மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பு

மதுரை: “நாட்டு மக்களின் நலன், தேசத்தின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்” என மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழகத்திற்கு முதன்முறையாக சனிக்கிழமை இரண்டு நாள் பயணமாக புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட குடியரசுத் தவைர் மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்கு 12.01மணிக்கு வந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.