பாகிஸ்தான்: போலீஸ் அலுவலக வளாகத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

கராச்சி,

பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி பல மணிநேரம் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தினர்.

இந்த தாக்குதலில் இரண்டு போலீசார், ஒரு ரேஞ்சர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்” என்று சிந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார், மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

தொடர் துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்குவது மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளை நீதியின் முன் கொண்டு வந்து கொல்லப்படுவார்கள் என்றும், நாட்டில் தீமையை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதில் உறுதியாக உள்ளது என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.