போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு..!!

சென்னை: போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு தந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் சலபதிக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் மனையை போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் விற்பனை செய்துள்ளனர். மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க மாவட்ட பதிவாளருக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.