சென்னை: மோசடி வழக்கில் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி ரூ.56.82 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
