ஏழு நாட்களில் 51 படுகொலைகள்: மாகாண பொலிஸார் தகவல்…!


இலங்கையில் கடந்த 7 நாட்களில் (12 – 18) மாத்திரம் 51 படுகொலைச் சம்பவங்கள்
பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகாண பொலிஸாரின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட 7 நாட்களில், 3 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 51 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத் தகராறு, தனிப்பட்ட தகராறு, காதல் விவகாரம், போதைப்பொருள் விற்பனைப்
போட்டி மற்றும் கோஷ்டி மோதல்களால் மேற்படி படுகொலைச் சம்பவங்கள்
இடம்பெற்றுள்ளன.

ஏழு நாட்களில் 51 படுகொலைகள்: மாகாண பொலிஸார் தகவல்...! | 51 People Massacred In Seven Days

படுகொலைகள்…!

அதற்கமைய, வடமேல் மாகாணத்தில் 7 நாட்களில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 9 பேரும், தென் மாகாணத்தில் 7 பேரும், மத்திய மாகாணத்தில் 3
பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வட மத்திய மாகாணத்தில் 6 பேரும், ஊவா மாகாணத்தில் 5 பேரும், கிழக்கு
மாகாணத்தில் 4 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பேரும் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.