பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் எண்ணத்திலும், நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் நோக்கத்திலும் தமிழக அரசின் சார்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புத்தக கண்காட்சியின் மூலம் பொதுமக்களும் புத்தகப் பிரியர்களும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். மேலும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளை புத்தக கண்காட்சி மூலமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தேனியில் முதலாவது புத்தகத் திருவிழா வரும் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறும் இடம் தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தனியார் திடலில் அரங்குகள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.