நடிகரும், பாலகிருஷ்ணாவின் அண்ணன் மகனுமான தாரக ரத்னா 39 வயதில் மரணம்! சோகத்தில் மூழ்கிய என்.டி.ஆர் குடும்பம்


தெலுங்கு நடிகர், அரசியல்வாதி நந்தமுரி தாரக ரத்னா மரணடைப்பால் உயிரிழந்த சம்பவம் என்.டி.ஆர் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் தாரக ரத்னா

மறைந்த பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ்வின் பேரன் தாரக ரத்னா.

நடிகர் பாலகிருஷ்ணாவின் அண்ணன் மோகன கிருஷ்ணாவின் மகனான இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆருக்கு சகோதரர் முறையான தாரக ரத்னா, அரசியலில் கவனம் செலுத்தி வந்தார்.

பாலகிருஷ்ணா-தாரக ரத்னாBalakrishna/Taraka Ratna

சமீபத்தில் ஒரு அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் கோமா நிலைக்கு சென்றார்.

அகால மரணம்

இந்த நிலையில் தாரக ரத்னா சிகிச்சை பலனின்றி தனது 39வது வயதில் மரணமடைந்தார்.

அவரது மறைவு என்.டி.ஆர் குடும்பம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாரக ரத்னா/Taraka Ratna

மூத்த நடிகர் சிரஞ்சீவி உட்பட நடிகர்கள் பலரும் தாரக ரத்னா மறைவுக்கு உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் ரசிகர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக தெலுங்கு பிலிம் சேம்பரில் வைக்கப்படும் என்றும், இறுதிச் சடங்குகள் நாளை மாலை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.  

தாரக ரத்னா/Taraka Ratna



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.