வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! பல மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை


வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (19) பிற்பகல் 1.30 மணி முதல் இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மின்னலுக்கான சாத்தியக்கூறுகள்

வானிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்! பல மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை | Weather Alert Sri Lanka

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது. 

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.