கோஹிமா: கடந்த 1989-ம் ஆண்டில் நாகாலாந்தில் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து நாகாலாந்துக்கு மது கடத்தி வருவது அதிகரித்தது.
இந்த சூழலில் அந்த மாநிலத்தில் வரும் 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு இலவசமாக மதுபானங்களை வழங்க கடத்தல் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து உள்ளன. இதை தடுக்க நாகாலாந்து பெண்கள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.