இந்தியா – சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை: துவக்கி வைத்தார் பிரதமர் மோடி| India-Singapore UPI, business transaction: Prime Minister Modi inaugurated

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறையை இன்று(பிப்.,21) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.

latest tamil news

எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இதனை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு கண்காணித்து வருகிறது.

latest tamil news

பல்வேறு வங்கி கணக்குகளை ஒரே செயலி மூலம் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த இயலுமென்பதால், இளைய தலைமுறையினரிடம் யு.பி.ஐ. முறை வெற்றிகரமாக சென்று சேர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா -சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை திட்டம் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று (பிப்.,21) பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார். இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்டோர் பங்கேற்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.