ஜி.கே.வாசன் பேச்சால் மாஜி அமைச்சர்கள் அதிர்ச்சி: இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்காத அதிமுக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசை ஆதரித்து, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் கூறியதாவது: இந்த தேர்தலை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராதவிதமான தேர்தல் ஆகும்.
சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு அதிமுக கூட்டணி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது. இஸ்லாமியர்களுக்கு பிரச்னை என்றால் குரல் கொடுக்கக்கூடிய அரசு அதிமுக அல்ல. இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில்  பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் நாம்  எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவை பற்றி இப்படி தவறாக பேசி விட்டதை சுதாரித்த ஜி.கே.வாசன், உடனடியாக அடுத்த வார்த்தையிலேயே குரல் கொடுப்பது அதிமுகவும், தமாகாவும்தான் என மாற்றி பேசினார். இந்த பேச்சால் அருகே இருந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.