சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருதை சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எவ்வித தண்டனையும் பெறாமல் பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகர்ச்சி இன்று எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக […]
