எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேர் கைது.!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.