ஓபிஎஸ் தரப்பில் அடுத்த விக்கெட்; ஈரோட்டில் பெரிய ட்விஸ்ட்… குஷியில் எடப்பாடி டீம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. இதனால் பிரச்சாரக் களம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுகவிற்குள் வேட்பாளர்களை நிறுத்துவதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையில் போட்டி ஏற்பட்டது. எடப்பாடி தரப்பில் கே.எஸ்.தென்னரசு, ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

டெல்லி பேச்சுவார்த்தைஅதன்பிறகு டெல்லி முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் பின் வாங்கிக் கொண்டு வேட்பாளரை வாபஸ் பெறச் செய்தார். அதேசமயம் பிரச்சாரத்திற்கு செல்லாமல் ஓபிஎஸ் அணியினர் ஒதுங்கி கொண்டனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்குள் பூசல் வெடித்துள்ளது. ஓபிஎஸ் அணி சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முருகானந்தம்.
அணி மாறிய நிர்வாகிகள்ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் முருகாந்தம் இணைந்து கொண்டார். அப்போது அம்மா பேரவை ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எல்.தங்கராஜ், அதிமுக மருத்துவ அணி செயலாளரும், மாவட்ட ஈரோடு மாவட்ட செயலாளருமான டாக்டர் சிவமுருகன், அதிமுக ஈரோடு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரும் உடனிருந்தனர்.
​​
ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன்இதன் பின்னணி குறித்து விசாரிக்கையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்தும் போது மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த முருகானந்தமிடம் கருத்து கேட்கப்படவில்லை. தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்புமின்றி வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.
இரட்டை இலையை மீட்ட எடப்பாடிஇதனால் முருகானந்தம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லையாம். இந்த சூழலில் தான் அணி மாறும் முடிவை முருகானந்தம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எடுத்துள்ளனர். இதுபற்றி முருகானந்தம் தரப்பினர் கூறுகையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மீட்டெடுத்துள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு ஷாக்கட்சி அவர் வசம் தான் இருக்கிறது. எனவே தான் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்து கொண்டோம். ஓபிஎஸ் அணியில் இருக்கும் அனைவரும் விரைவில் அதிமுகவிற்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
சிவசேனா விவகாரம்ஏற்கனவே பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எடப்பாடி வசமிருக்கின்றனர். சிவசேனா கட்சி விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சாதகமாக தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கிறது.
​​
சரியும் செல்வாக்குஇந்த சூழலில் ஓபிஎஸ் அணியின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெறும் வாக்குகளை மிகவும் முக்கியமானதாக எடப்பாடி கருதுகிறார். இதை வைத்து அடுத்தடுத்த அரசியல் ரீதியாக காய்களை நகர்த்த திட்டமிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.