சென்னை: சென்னை மாநகராட்சி நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும் 440 தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சியால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலம், எத்திராஜ் சாலையில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் […]
