மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபத்து – சில வினாடிகளில் உயிர் தப்பிய விஷால் உள்ளிட்ட படக்குழுவினர்

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரித்து வர்மா நடிக்கிறார். மேலும் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று இரவு ஒரு லாரி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது லாரி நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல், அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டில் சென்று மோதியது. அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்தனர். நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி நிற்கவில்லை என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள பதிவில் , 'மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் சில வினாடிகளில் பெரும் விபத்திலிருந்து தப்பித்துள்ளேன். கடவுளுக்கு நன்றி' என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.