கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏர்ரஅள்ளி பகுதியில் நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் பலியானார்கள். தருமபுரி மாவட்டம் சவலூரை சேர்ந்த முத்து (20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45), 3 மாத குழந்தை வர்ஷினி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
