ஜப்பான் தூதரக அரசியல் ஆலோசகர் – ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு கொழும்பில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் நேற்றைய தினம் (21.02.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போது, வட மாகாணத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் விஜயகலா மகேஸ்வரனிடம் ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி கலந்துரையாடியுள்ளார்.
அவரிடம் தேசிய மற்றும் வடக்கின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் மக்களின்
பிரச்சினைகள் குறித்தும் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார்.