தேனி மாவட்டத்தில் சாலையோரம் நின்ற பள்ளி பேருந்து, கார் மீது அடுத்தடுத்து ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் திரவியம் (74). இவரது மகன் முத்து விஜயராமலிங்கம் (47). இந்நிலையில் திரவியம் தனது மகனுடன் தேனி நோக்கி கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பழனி செட்டிபட்டி பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்து மீது ஸ்கூட்டர் மோதி, பின்பு அருகில் இருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தந்தை-மகன் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக திரவியம் உயிரிழந்துள்ளார். மேலும் மகன் முத்து விஜயராமலிங்கத்துக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பழனிசெட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.