பிற மொழிகளுக்கு அடிமையாகாமல் நாம் நம்முடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பிற மொழிகளுக்கு அடிமையாகாமல் நாம் நம்முடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர், நாட்டியக் கலைஞர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய ஆளுநர், ஆங்கிலம் கற்பது தவறல்ல என்றும் திருக்குறள், திருமுறை மற்றும் திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட ஞானத்தை கொண்ட நமது கலாச்சார நூல்களை கற்க வேண்டும்  என்றார். விழாவில் நாட்டியக் கலைஞர்களின் நடனத்தையும் ஆளுநர் ரவி கண்டுரசித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.