மும்பையில் நடுவழியில் தீப்பற்றி எரிந்த பேருந்து.. 400 சிஎன்ஜி பேருந்துகளின் இயக்கம் நிறுத்தம்..!

மும்பையில் ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக டாடா நிறுவனத்தின் சி.என்.ஜி பேருந்து நடுவழியில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து, சுமார் 400 பேருந்துகளின் இயக்கத்தை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

மும்பையில் தனியார் போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை வாங்கி மாநகராட்சி நிர்வாகம் இயக்கி வருகிறது.

ஆயிரக்கணக்கான பேருந்துகளில் சி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் டாடா நிறுவனத்தின் 400க்கும் மேற்பட்ட பேருந்துகளும் அடக்கம்.

அவற்றில் 2 பேருந்துகள் ஏற்கனவே தீ விபத்துக்குள்ளான நிலையில், நேற்று மேலும் ஒரு பேருந்து நடுவழியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்கூட்டியே பயணிகள் இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.