விளையாட்டில் தோல்வியடைந்தபோது பார்வையாளர்கள் சிரித்ததால் ஆத்திரம்… 12 வயது சிறுமி உள்பட 7 பேர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததற்காக ஒரு வீரரைப் பார்த்து சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக இருமுறை தோல்வியடைந்தார். இதனால் அங்கிருந்த சிலர் அவரைப் பார்த்து சிரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பருடன் வந்து கிளப்பில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.