23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல்

திருமலை: ஐதராபாத் விமான நிலையத்தில் 23 பெண்களிடம் ரூ.7.89 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைத்திற்கு சூடான் மற்றும் சார்ஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைத்திற்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் சூடானிலிருந்து சார்ஜா வழியாக ஜி9458 விமானம் வந்தது.

இதில், சந்தேகப்படும்படியான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், 23 பெண் பயணிகளிடம் இருந்து மொத்தம் 14,906  கிராம் தங்கம் கொண்ட ரூ.7.89 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. 23 பெண் பயணிகளிடமும் விசாரணை நடக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.