ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று (பிப்.24) நடக்கும் காங்ரகிஸ் கட்சியின் வழிகாட்டு குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.
காந்தி குடும்பத்தினர், புதிதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், முடிவகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதால் இந்தக் கூட்டத்தை காந்தி குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். இருந்தபோதிலும் 2024ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.