சென்னை: மது போதையில் வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற நபர் கைது

ராயப்பேட்டையில் இன்று அதிகாலை வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற போதை நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர் அதே பகுதியில் கடந்த 30 ஆண்டுகால வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் தூக்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பிரபுவின் குழந்தையை கடத்த முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றுள்ளனர்.
image
அப்போது அந்த நபர் தப்பியோடி போது வீட்டின் வாசலில் விழுந்துள்ளார். இதையடுத்து அவரை எழுப்ப முயன்றபோது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது.  அதன்பிறகு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரபு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராயப்பேட்டை போலீசார், போதை ஆசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர், ராயப்பேட்டை பகுதியில் சாலை ஓரத்தில் வசிக்கும் புருஷோத்தமன் என்பதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரியவந்துள்ளது. புருஷோத்தமன் போதையில் இருப்பதால், போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தினால் தான் முழுமையான தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.