சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார். தமிழ்நாட்டின் இரும்பு மங்கை என அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஐயன் லேடி என்று எழுதப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பிலும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெ.வின் […]