Leo: அப்போ ரஜினி…இப்போ விஜய்..இதான் உண்மை..பளிச் என பேசிய பிரபலம்..!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்தின் பூஜை துவங்கும் முன்பே இப்படம் பல கோடிக்கு வியாபாராமாகியுள்ளது. இந்நிலையில் லியோ படத்தை அடுத்து விஜய்யின் படத்தை இயக்கவும் தயாரிக்கவும் பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.

Dhanush: இப்படி பண்ணீட்டிங்களே தனுஷ்..வா வாத்தி பாடலால் புலம்பும் ரசிகர்கள்..!

அதற்கு காரணம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு விஜய்யின் படங்கள் செய்யும் வசூல் தான். கடைசியாக வெளியான விஜய்யின் படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதற்கு முழு காரணம் விஜய் தான். இவ்வாறு வசூல் சக்ரவர்த்தியாக வலம் வரும் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் சிலர் பேச இது ரஜினி ரசிகர்களை சீண்டியது. மேலும் வாரிசு படத்தின் விழாவில் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்பது போல பேச அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் இந்த சூப்பர்ஸ்டார் சர்ச்சை ஒரு விவாதமாகவே போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக பிரபலங்கள் கலந்துகொள்ளும் பேட்டிகளில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற கேள்வி கட்டாயமாக மாறிவிட்டது. சிலர் தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி தான் என கூறி வருகின்றனர்.

மற்றும் சிலர் விஜய் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை எட்டிவிட்டதாக பேசி வருகின்றனர். எனவே ஒரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான
சீமான்
அடுத்த சூப்பர்ஸ்டார் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் இருந்தார், அதன் பிறகு ரஜினி வந்தார். தற்போது விஜய் இருக்கின்றார். இவ்வாறு காலத்திற்கு ஏற்றாற்போல சூப்பர்ஸ்டார் நடிகர்கள் வருவார்கள். என்னை பொறுத்தவரை விஜய் சூப்பர்ஸ்டார் இடத்தை நெருங்கிவிட்டார்.

இதைப்பற்றி ரஜினியே ஒரு மேடையில் பேசியுள்ளார். எனவே சில ரசிகர்கள் தான் இதை பெரிய பிரச்சனை போல பாவித்து வருகின்றனர் என்றார் சீமான். மேலும் விஜய்யின் வெற்றியை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும் பேசியுள்ளார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.