உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகரில் பிரம்மாண்ட பேரணி

உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவு தினத்தை ஒட்டி, ஜார்ஜியா தலைநகர் டிபிலிசியில்(Tbilisi) நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

உக்ரைன் அகதிகள் மற்றும் உள்நாட்டு அடக்குமுறையால் நாட்டை விட்டு வெளியேறிய ரஷ்யர்கள், ஜார்ஜியா நாட்டினருடன் இணைந்து, அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடம் முன்பு திரண்டு உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, ஜார்ஜியாவில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.