சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கும்படி தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் முறையிட திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும், கட்சி விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் […]
